நாய்களை ரேப் செய்து கொலை செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை

நாய்களை ரேப் செய்து கொலை செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை

கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டவை அடிக்கடி நடைபெற்று வரும் இந்நாளில் நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் சித்ரவதை செய்து கொன்ற பிரிட்டனைச் சேர்ந்த விலங்கியல் ஆர்வலரின் செயல் அச்சத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆடம் பிரிட்டன் என்பவர் முதலை ஆராய்ச்சியில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவர். இவர் முதலைகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் வாங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர் 60க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, முதலைகளை ஆராய்ச்சி செய்து வரும் இவர், தனது வீட்டருகிலேயே கப்பல் சரக்கு கண்டெய்னரில் ஒரு ஆராய்ச்சி கூடத்தை அமைத்துள்ளார். அதில், நாய்களை பாலியல் வன்கொடுமை செய்வது முதல், அவற்றை சித்ரவதை செய்து கொலை செய்வது வரை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்களை தனது சமூகவலைத் தளப் பக்கங்களிலும் பதிவேற்றியுள்ளார். இதுதான் இவர் சிக்குவதற்கு முக்கிய ஆதாரம்.

கடந்த ஆண்டு இவரை கைது செய்த ஆஸ்திரேலிய காவல்துறையினர், இவரிடம் நடத்திய விசாரணையின்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, இவர் எந்த நாய்களையும் வளர்க்கவில்லை. ஆனால், யாராவது வெளியூர் செல்லும் நிலையில், தங்களது வளர்ப்பு நாயை பார்த்துக் கொள்ள ஆள் தேடுவார்கள் இல்லையா? அவர்கள்தான் ஆடம் பிரிட்டனின் முதல் குறி. அவர்களை அணுகி நாய்களை தான் பார்த்துக் கொள்வதாக கூறுவார். ஆடம் பிரிட்டன் ஒரு விலங்கியல் நிபுணர் என்பதால், அவர்களும் தங்களது வளர்ப்பு நாய்களை இவரிடம் ஒப்படைத்து விட்டு செல்வார்கள். ஒரு சிலர் திரும்பி வந்து நாய்களை வாங்கிக் கொள்வார்கள். பலர் ஊரையே காலி செய்துவிட்டு சென்று விடுவதால், அவர்கள் திரும்பி வருவதில்லை.

அதுபோன்ற நாய்களைத் தான் இவர் பாலியல் வன்கொடுமை செய்வதோடு, சித்ரவதையும் செய்து கொலை செய்துள்ளார். ஒருவேளை திரும்பி வந்து நாய்களை கேட்டால், வளர்த்தவர்களை பார்க்காத ஏக்கத்தில் சாப்பிடாமல் இருந்து இறந்துவிட்டதாக கூறிவிடுவார். இந்நிலையில், சமூகவலைதளங்களில் ஆடம் பிரிட்டன் பதிவிட்ட வீடியோக்களை பார்த்த ஒருவர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அவரை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, ஆடம் பிரிட்டன் ‘பாராஃபிலியா’ என்ற மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, உயிரற்ற பொருட்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதை ரசிக்கும் வகையிலான மன நோயால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *