நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

இலங்கைக்கு நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களை மீள திறக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாட்டுக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயமாக ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார தரப்பினரின் கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *