நெருக்கடியால் திணறும் இலங்கை – மீண்டும் கடன் பெறுவது தொடர்பில் ஆராய்வு

நெருக்கடியால் திணறும் இலங்கை – மீண்டும் கடன் பெறுவது தொடர்பில் ஆராய்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாக மூன்று வெளிநாடுகளில் கடனை பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இவ்வாறு கடனை பெறுவது பற்றி இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஏற்கனவே இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தியா ஆயிரத்து 400 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கியதாக நிதியமைச்சர் இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.இலங்கையில் நிலவும் கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டிற்கு தேவையான அத்தியவசிய பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவை இறக்குமதி செய்வது தொடர்பாக கடும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக நட்பு நாடுகளில் அரசாங்கம் கடனுதவிகளை பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.இதனிடையே எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி அளவில் இலங்கை வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனுக்கான தவணை மற்றும் வட்டியை செலுத்த வேண்டியுள்ளது.

இதற்காக பல மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *