பசிலுக்கு விடுக்கப்பட்ட ‘அட்வைஸ்’

பசிலுக்கு விடுக்கப்பட்ட ‘அட்வைஸ்’

நாட்டின் ஜனாதிபதியாக வர விரும்பினால் முதலில் பசில் ராஜபக்ச தனது கொள்கைகளை மாற்ற வேண்டுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் டாக்டர் வசந்த பண்டார இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவிக்கயைில்,பசில் ராஜபக்ஷ, தனது கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் ஜனாதிபதியாக ஒருபோதும் வரமுடியாது.

எனவே அவர், ஜனாதிபதியாக வருவதற்கு விரும்பினால், அவர் மாற வேண்டும். அதாவது அரசியலில் மாற்றம் இருந்தால், கொள்கையில் மாற்றம் இருந்தால் அவருடன் எந்த பிரச்சனையும் கிடையாது.பசில் ராஜபக்ஷ இவ்விடயங்களில் முழுமையாக மாறினால், நாட்டின் தலைவராவதற்கு தகுதியானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள பசில் ராஜபக்ச இதுவரை அதனை இரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *