பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள் – திருப்பி அனுப்பட்ட நோயாளர்கள்!

பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள் – திருப்பி அனுப்பட்ட நோயாளர்கள்!

நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு இன்று காலை வந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெருந்திரலான நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன் குறித்த நோயாளர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனினும் அவசர சிகிச்சை பிரிவுகளின் நடவடிக்கை மாத்திரம் முன்னெடுக்கப்படுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை முதல் 24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதேவேவேள பொகவந்தலாவ, டிக்கோயா, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துளை மற்றும் நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *