பணிப்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு – ரிசாத்தின் நெருங்கிய உறவினர் கைது

பணிப்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு – ரிசாத்தின் நெருங்கிய உறவினர் கைது

பணிப்பெண் ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னைய வீட்டில் பணிப்பெண்களாகப் பணிபுரிந்த 22 மற்றும் 32 வயது பெண்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவர்கள் டயகமவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது டயகமவைச் சேர்ந்த 22 வயது பெண் 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. 

மக்கென்சி வீதியில் உள்ள வீட்டில் நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவர்  அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில்  செயாப்தீன் இசமதீன் என்ற 44 வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *