பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டம் மனிஹல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை அந்த பகுதிக்கு சென்றனர். பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர்.இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

தொடர்ந்து அந்த பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *