பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும்

பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானி லை நிலவுமென என வளிமண்டல வியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங் களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் எனவும் வளிமண்டல வியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டமாகக் காணப்படும்.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்திங்களில் மணித் தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *