பிரான்சில் ஒரேநாளில் 59 ஆயிரம் பேருக்கு தொற்றியது கொரோனா

பிரான்சில் ஒரேநாளில் 59 ஆயிரம் பேருக்கு தொற்றியது கொரோனா

பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகளவில் தொற்று உறுதிப்பட்டமையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் அதிக பாதிப்பு இடம்பெற்றதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 24 மணி நேரத்தில் 168 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 12 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6 லட்சத்து 87 ஆயிரத்து 498 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மேலும் 70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *