பிரான்சில் கொண்டு வந்த புதிய சட்டம்!

பிரான்சில் கொண்டு வந்த புதிய சட்டம்!

பிரான்சில் சுகாதார அனுமதிச் சான்றிதழ் கட்டாயம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் பலர் கைது செய்யப்பட்டனர்.

பிரான்சில் கொரோனாவின் நான்காவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்துவதற்காக, ஊரடங்கு கொரோனா கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு தீவிரமாக்கி வருகிறது.

அதில், சுகாதார அனுமதிச் சான்றிதழ், அதாவது pass sanitaire இனி கட்டாயமக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதை சுகாதார அமைச்சரும் உறுதிப்படுத்தினார்.

இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நேற்று நாடு முழுவதும் மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது. தலைநகர் பரிசில் 11,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நாடு முழுவதும் 161,000 பேர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தமாக 168 இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக தலைநகர் சோம்ப்ஸ் எலிசேயில் பலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *