பிரான்சில் நடந்த பயங்கரம்! 15 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்

பிரான்சில் நடந்த பயங்கரம்! 15 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்

5 hours ago

பிரான்சில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், தன்னுடைய சகோதரனை ஒன்பது முறை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Nogent-sur-Marne (Val-de-Marne) நகரில் கடந்த திங்கட் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சரியாக 7 மணி அளவில் தனது 21 வயதுடைய சகோதரனின் அறைக்குள் நுழைந்த 15 வயது சிறுவன், அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். சுமார் ஒன்பது முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அந்த சகோதரன் வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடிவந்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, மருத்துவ குழுவினரோடு விரைந்து வந்த பொலிசார், காயத்தால் பாதிக்கப்பட்ட நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் இந்த கொடூர சமபவத்தில் ஈடுபட்ட அந்த 15 வயது சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அதன் பின் தன்னுடைய தாயாருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர், தான் இருக்கும் இடத்தை தயாரிடம் கூறியதால், அங்கு விரைந்து சென்ற பொலிசார், சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *