பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை
கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக்கொல்லப்பட்ட இவ்விருவரது உடல்களும், பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தடயங்களைக் கண்டுபிடிப்பதில் தடயவியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கொலையுண்டவர்கள் யாழ்ப்பாணம்,உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (51), இராஜதுரை டிலக் ஷனா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் இருவரது சடலங்களும் அவர்களுடைய வீட்டில் இரத்த வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டன.
இவர்களது கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் இராஜதுரையும், அவரது இரு புதல்வர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *