பிரித்தானியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்து..!

பிரித்தானியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்து..!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஓராண்டுக்கு முன்பே வெளியேறிய போதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

இந் நிலையில் ஒருவழியாக இவ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களான உர்சுலா வோன் டெர் லெயன் மற்றும் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஜனவரி 1 ஆம்  திகதி முதல் இது அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரித்தானியா உடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்  ஒப்பந்தத்திற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *