புகையிரதத்துடன் விபத்து : ஒருவர் பலி

புகையிரதத்துடன் விபத்து : ஒருவர் பலி

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்த குறித்த நபர், தரித்திருந்த கனரக வாகனத்தைக் கடந்து புகையிரத கடவையைக் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புகையிரத திணைக்கள பொலிஸார் மோட்டார் சைக்கிளைப் பாதுகாப்பாக அருகில் உள்ள வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, குறித்த வீதி பெருமளவு மக்கள் நடமாடும் வீதி என்பதாலும், பாடசாலை மிக அருகில் உள்ளமையாலும் பாதுகாப்பான புகையிரத கடவை ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் பல்வேறு தடவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற விபத்து இறுதியான விபத்தாக அமையும் வகையில் பாதுகாப்பு கடவை ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *