புத்தளத்தில் காட்டு யானையின் உயிரை பறித்த மின்சார வேலி!

புத்தளத்தில் காட்டு யானையின் உயிரை பறித்த மின்சார வேலி!

புத்தளத்தில் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், நேற்று (12-12-2021) இரவு புத்தளம், நவகத்தேகம மொரகஹவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், உயிரிழந்த யானைக்கு நிகாவரெட்டிய மிருக வைத்தியர் இசுருவினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த யானை 30 வயது மதிக்கதக்கதாக காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். சம்பத்தின் பின்னர் கானியின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபரை நாளை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *