பெண்ணொருவர் வெட்டிக்கொலை ! வீட்டினுள் உடலை மறைத்து வைத்த துயரம்

பெண்ணொருவர் வெட்டிக்கொலை ! வீட்டினுள் உடலை மறைத்து வைத்த துயரம்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில்  பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில்  குறித்த பெண்ணின் சடலம் வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பூண்டுலோயா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேககத்தின் அடிப்படையில் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *