பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர்.

29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதே நேரம் 2018 ஆம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

ஆனால் குறித்த 7 பேர் விடுதலையில் இது வரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அவர்களின் சிறை வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறன்றது.

அண்மையில் பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து நடைபெற்ற பரப்புரையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இயக்குனர்கள் வெற்றிமாறன், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் விடுதலைக்கு ஆதரவாகப் கருத்து தெரிவித்திருந்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறது.

இந்நிலையில்,இந்நிலையில், எழுவர் விடுதலையை வலியுறுத்தி சம்பத் குமார் மற்றும் ஆன்டனி என்கிற இருவரும் சென்னை அம்பத்தூரில் உள்ள கல்யாணபுரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு கம்ம்யூனிஸ்ட் கட்சி (சி.பி), இடது தொழிற்சங்க மய்யம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – அரண்செய்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *