போப் ஆண்டவரின் தொப்பி அணிந்த சிறுவன்

போப் ஆண்டவரின் தொப்பி அணிந்த சிறுவன்

வத்திக்கான் நகரில் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் போது 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறிப் போப் ஆண்டவரின் அருகில் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார் அப்போது அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக்குதித்து விளையாடுவதைக் கண்ட பார்வையாளர்கள் திகைத்துப் போயினார். 
பின்னர் மீண்டும் போப் ஆண்டவரின் அருகே சென்ற சிறுவன் ஒரு கட்டத்தில் அவர் அணிந்திருக்கும் வெள்ளை தொப்பியை வழங்குமாறு அடம்பிடித்தான் சிறுவனை இந்த செய்கையை கவனித்த நிகழ்ச்சித் தலைவர் சிறுவனை சமாதானப்படுத்த முயன்ற போதும் சிறுவன் அடம்பிடித்து ஆண்டவரின் தொப்பியை வாங்கித் தருமாறு கேட்டதால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது இறுதியாக என்ன செய்தாலும் இந்த சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்து கொண்டவர் தனது தொப்பியை கொடுத்து சிறுவனின் ஆசை நிறைவேற்றினார். ஆண்டவரின் தொப்பியை அணிந்து கொண்ட மகிழ்ச்சியில் மேடையில் இருந்து இறங்கிய சிறுவனின் அனைவரும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இந்த சிறுவனின் குறும்புத்தனங்கள் எடையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆண்டவரின் பாதுகாவலர்களோ தடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *