போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயன்ற மாங்குளம் பெண் கைது

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயன்ற மாங்குளம் பெண் கைது

பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று அதிகாலை கட்டார் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவை போலியான ஆவணங்கள் என்பதைக் கண்டறிந்து அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் சமர்ப்பித்த ஆவணங்களில் பிசி.ஆர். பரிசோதனை ஆவணமும் போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *