மட்டக்களப்பில்  முந்திரித் தோட்டம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பில் முந்திரித் தோட்டம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் முந்திரித்தோட்டம் ஒன்றின் மரத்தின் கீழ் பாதுகாப்பாக பொலீத்தீன் பை ஒன்றினால் சுற்றிவைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று, ரவைகள் மற்றும் மகசீன் என்பனவற்றை செவ்வாய்க்கிழமை (29) மாலை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரா தெரிவித்தார்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரா தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள் பந்துல ஐயூப்கான், பி.சி.டி. அமில, போப்பிட்டிய, வன்னியசிங்க, ஜகான். விஜயசேகர ஆகிய பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை(29) மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் சோதனையில் ஈடுபட்டனர்.இதன்போது மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி, 2 மகசீன், 49 ரவைகள் என்பனவற்றை மீட்டுள்ள துடன். துப்பாக்கி மீட்கப்பட்ட முந்திரிகைத் தோட்ட உரிமையாளர் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *