மன்னார் கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம்!

மன்னார் கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம்!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலைமீட்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அது குறித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்கவில்லை.

இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்னுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.எனினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *