மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 400 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 400 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 400 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் மன்னார் பெரியகமம், சாவக்காடு, உப்புக்குளம், பேசாலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 527 பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வருடம் ஜனவரி தொடக்கம் தற்போது வரை 383 கொரோனா தொற்றாளர்களும் மொத்தமாக 400 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேநேரம், மன்னார் மாவட்டத்தில் இதுவரை 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *