மரங்கள் வளர்க்க இளவரசர் சார்லஸ் வேண்டுகோள்.

மரங்கள் வளர்க்க இளவரசர் சார்லஸ் வேண்டுகோள்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று அடுத்த ஆண்டு 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால் 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக கொண்டாட ராயல் அரண்மனை முடிவு செய்துள்ளது.இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டுகால ஆட்சியைக் கவுரவிக்கும் வகையில் 2022-ம் ஆண்டில் அந்நாட்டு மக்கள் அனைவரும் மரங்களை நடவேண்டும் என இளவரசர் சார்லஸ் கேட்டுக் கொண்டார்.இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளாட்டினம் ஜூபிலியின் தொடக்கமாக வேல்ஸ் இளவரசர் சார்லஸ், விண்ட்சர் கோட்டையில் முதல் மரத்தை நட்டார். அப்போது அவருடன் ராணி எலிசபெத்தும் உடனிருந்தார்.

இதுதொடர்பாக இளவரசர் சார்லஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:தனி நபராக இருந்தால் உங்கள் தோட்டத்தில் ஒரு மரக்கன்றை நடவு செய்யலாம். பள்ளி, சமூக குழு, ஒரு சபை ஆகியவை மொத்தமாக மரங்களை நடலாம். விவசாயி உள்பட எல்லோரும் மரம் நடுவதில் ஈடுபடலாம்.சரியான இனங்கள், சரியான இடங்களில் நடப்படுவது மிகவும் முக்கியமானது. ஏற்கனவே உள்ள மரங்களைப் பாதுகாத்து பராமரிக்கும் அதே வேளையில், அதிகமான வனப்பகுதிகள், அவென்யூக்கள் மற்றும் நகர்ப்புற நடவு திட்டங்களும் நிறுவப்பட வேண்டும்.

LONDON, UNITED KINGDOM – FEBRUARY 25: Queen Elizabeth II during a visit to the headquarters of MI5 at Thames House on February 25, 2020 in London, England. MI5 is the United Kingdom’s domestic counter-intelligence and security agency. (Photo by Victoria Jones – WPA Pool/Getty Images)

இது எதிர்காலத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் அறிக்கை. மரங்களை நடுவதும், இருக்கும் வனப்பகுதிகள், காடுகளை பாதுகாப்பது சுற்றுச்சூழலைக் காக்கும் எளிய, செலவு குறைந்த வழிகள்.16 முதல் 24 வயதிற்குட்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு மரங்களை நடவு செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனின் சிறப்பு சுற்றுச்சூழல் கல்லூரியான கேபல் மேனர் கல்லூரி வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முயற்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தின் முன்னணியில் மரங்கள் நிற்கின்றன. நமது அழகான கிராமப்புறங்களை அடுத்த தலைமுறைகளாக நிலைநிறுத்த வேண்டும். மரங்களை நடுவது ராணியின் கம்பீரமான சேவைக்கு நாம் செய்யும் பொருத்தமான செயல். அனைவரும் இதில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்,இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *