மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கொலரோடாவில் உள்ள பவுல்டர் பகுதியில் மளிகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால், மக்கள் அலறியடித்து வெளியேற முயற்சி செய்தனர். தகவல் அறிந்த போலீசார், அதி விரைவு அதிரடிப்படையினர், எப்பிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை காப்பாற்ற முயற்சியில் அதிரடியாக ஈடுபட்டனர். மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில், போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். போலீசார் விரைவாக செயல்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்தனர்.

இது குறித்து தகவலை போலீசார் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட நபர், 35 வயது மதிக்கத்தக்க இவரை குறித்து , சம்பவ இடத்தில் இருந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து, விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *