மாவட்டங்கள் விரும்பாது விட்டால் எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்! மாகாண வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கமாட்டோம் – சுகாதார அமைச்சர்

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்! மாகாண வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கமாட்டோம் – சுகாதார அமைச்சர்

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்.அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் நாம் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம். அவர்களே அதனை வைத்திருக்க முடியும். அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு மூலம் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என மேலும் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *