முகக்கவசம் அணியாது  கடமையாற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முகக்கவசம் அணியாது கடமையாற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியவர்களுக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் இன்று (07.05) நடவடிக்கை எடுத்துள்ளனர்.வவுனியா நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்திய சுகாதார பரிசோதகர்கள் அங்கு கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுன்கிறார்களா என்பது குறித்து கவனம் செலுத்தினர்.

இதன்போது பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாது வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர், முகக்கவசம் அணியாது கடமையாற்றியவர்கள், சீராக முகக்கவசம் அணியாமல் வர்த்தக நிலையங்களில் வேலைசெய்வோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.அத்துடன், அதிகரித்து வரும் கொவிட் தாக்கம் தொடர்பிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் சுகாதார பரிசேதகர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *