முன்னணிக் கழகங்கள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கிரிக்கெட்

முன்னணிக் கழகங்கள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாட்டின் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான 2021 பருவ காலத்திற்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளது 26 கலைஞர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் தலா 13 அணிகள் ஏ,பி என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாட உள்ளன. இதன் ஆரம்பப் சுற்றுப்போட்டி ஒக்ரோபர் 22, 30, 31 ஆம் திகதிகளிலும் நவம்பர் மாதம் 3, 6 ,10 ,13 ,14 ,17, 20, 21 ,24 ஆகிய 13 தினங்களிலும் நடத்தப்பட உள்ளன அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 26ஆம் திகதி என்றும் இறுதிப்போட்டி 28ஆம் திகதி அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்டிருந்த இப்போட்டி தொடரானது கடந்த 20ஆம் திகதிக்கு ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்ட போதிலும் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் போதியளவு பயிற்சிகளில் ஈடுபட முடியாது இருந்தது இதன் காரணமாக இத்தொடரை பிற்பாடு ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது இதன்படி போட்டி தொடரின் முதலாவது போட்டியில் அணிகளும் தந்தம் குழுவில் இடம் பிடித்துள்ள அணியொன்றை எதிர்த்த உள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *