முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரரால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரரால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அங்கொட சந்தியில் பெண் ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இன்று (24) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

முல்லேரியாவைச் சேர்ந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானவராவார். சந்தேக நபர் 46 வயதுடையவர் எனவும், அவர் போதைப்பொருள் பாவனைக்கு பெரிதும் அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் தனது கணவரை பிரிந்து அங்கொட சந்தியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் குறித்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அவர் பணிபுரியும் கடைக்கு பல தடவைகள் வந்து தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனது முன்மொழிவை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், அங்கொட சந்தியில் அவர் பணிபுரியும் கடைக்கு இன்று பிற்பகல் வந்து கத்தியால் குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *