முல்லைத்தீவில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு! 6 பேர் கைது

முல்லைத்தீவில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு! 6 பேர் கைது

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டகாசத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரிவி கமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து, சந்தேக நபர்களை இனம் காணும் நடவடிக்கையில், முல்லைத்தீவு பொலிஸார், தீவிரமாக செயற்பட்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில்ல யாழ்ப்பாண பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நவாலியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் ஆறு பேரும் சம்பவம் தொடர்பில் ஒப்புக்கொண்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் 6 பேரும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விசாரணையின் ஆரம்பக்கட்டத்தில் சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கடந்த 27ஆம் திகதி முல்லைத்தீவு கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த ஆயுதக் கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்கள் இரண்டின் மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *