முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெற்றன

இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதி வீதியெங்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் இடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு, வீதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *