மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்

மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்

சாம்சங் நிறுவனத்தின் பெரும்பாலான ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருப்பதாக சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிவித்தது. 

அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ், கேலக்ஸி நோட் மற்றும் கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் தேர்வு செய்யப்பட்ட சில கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்குவது பற்றிய தகவல் சாம்சங் கஸ்டர் கேர் அதிகாரி மூலம் தெரியவந்துள்ளது. புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாக சாம்சங் கஸ்டமர் கேர் அதிகாரி தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் அம்சங்களின் திறனை நன்கு ஆய்வு செய்த பின் ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *