யாழில் பொருள் தட்டுப்பாடு இல்லை-க.மகேஸன்.

யாழில் பொருள் தட்டுப்பாடு இல்லை-க.மகேஸன்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் 1980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன், மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.இதேவேளை தொற்றாளர்களுடன் தொடர்புடைய 2485 குடும்பங்களைச் சேர்ந்த 6805 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனைவிட கடந்த வாரத்தில் கொடிகாமம் வடக்கு, கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் பொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆகவே வணிகர் சங்கங்கள் வர்த்தகர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு இடையறாது சேவை கிடைக்க வழி செய்ய வேண்டும். எரிவாயு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எங்களுக்கு தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *