யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, பாற்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் நேற்றைய தினம் 51 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தின் தீர்மானத்தின் படி குறித்த பகுதி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் இன்று பிற்பகல் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *