யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் மத்தி பகுதியில் இன்று (08) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் ஜெயச்சந்திரன் தஜிதரன் என்ற 11 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் அவனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை திடீரென கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

பின்னர் குறித்த சிறுவனை அவசர அவசரமாக மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *