யாழில் வீடொன்றை உடைத்து பாரிய நகை திருட்டு: சந்தேக நபருக்கு வலைவீச்சு

யாழில் வீடொன்றை உடைத்து பாரிய நகை திருட்டு: சந்தேக நபருக்கு வலைவீச்சு

யாழ்ப்பாண மாவட்டம் சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீடு ஒன்றை உடைத்து 14 பவுண் நகை திருப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (06) யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி ஆலயத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் உரிமையாளர்கள் மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, நேற்று பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்தனர். இதன்போது கதவு உடைத்து நகை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸார் சந்தேக நபரைத்தேடி வலைவீசி வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *