யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம் -சந்திரகாந்தன் (பிள்ளையான்)

யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம் -சந்திரகாந்தன் (பிள்ளையான்)

“நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டே துப்பாக்கி ஏந்தி போராடினோம்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மக்களை முன்னேற்றுகின்ற பலப்படுத்துகின்ற கட்சியாகும். எங்கள் வேலைத்திட்டம் மிகத் தெளிவானது. நாம் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே சொல்கின்றோம்.

புதிய அரசாங்கத்தின் கொள்கையினால் மட்டக்களப்பு மாவட்டம் நன்மையடைகின்றது. நாங்கள் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் பிறரை எதிர்பார்த்திருந்து மிகவும் பின்தங்கிவிட்டோம். ஆனால் இப்போது தான் நாம் அனைத்தையும் செய்யப்போகின்றோம்.

ஆனால் இன்று சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் எங்களை தாக்குவதிலேயே குறியாக இருப்பதோடு, நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களையே பேசி வருகின்றனர் என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *