யாழ்.கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசு கையகப்படுத்தும் நிலை -முதல்வர் மணிவண்ணன்

யாழ்.கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசு கையகப்படுத்தும் நிலை -முதல்வர் மணிவண்ணன்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள, யாழ். கலாசார மத்திய நிலையத்தினை முன்னாள் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மத்திய அரசிடம் அதனை நிர்வகிக்க கையளிப்பதற்கு இணங்கியதன் காரணமாகவே,குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும், அதனை திறப்பதில் காலதாமதம் காணப்படுவதாக யாழ். மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,

நான் மாநகர முதல்வராக பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக இந்த விடயத்தினை முன்னிறுத்தி செயற்படுத்தி வருகின்றேன்.யாழ். கலாசார மத்திய நிலையத்தினை கையேற்று, அதனை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

எனினும் குறித்த கட்டடமானது யாழ். மாநகரசபையிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படுகின்ற நிலையில், அதனை யாழ். மாநகரசபை பொறுப்பேற்று நடாத்துவதற்குரிய செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்.

அத்தோடு அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துள்ளேன்.வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக குறித்த கட்டடமானது திறப்புவிழா செய்யப்பட்டு யாழ் மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்திய துணைத்தூதுவரிடம் குறித்த விடயம் தொடர்பில் பல விடயங்களை தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் குறித்த விடயம் தொடர்பில் எமக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள்.எனினும் குறித்த கட்டிடமானது வெகுவிரைவில் மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *