யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்!

யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது.

இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலை வளாகத்தில் எந்தவொரு கட்டிடம் புதிதாக நிர்மாணிப்பதாக இருந்தாலும் சரி ஒரு கட்டிடத்தை அகற்றுவதானாலும் சரி துணைவேந்தரின் ஒப்புதல் மிக முக்கியமானது என்றும்,

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரி மிலேச்சத்தனமாக நடந்து கொள்வது கவலை தருவதாகவும் அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பில் எவ்வித தகவலும் இன்னும் வெளிவரவில்லை.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *