யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை விடுதிகள் திறக்கப்பட்டன.

யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை விடுதிகள் திறக்கப்பட்டன.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டு புதிய விடுதிகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.நாட்டில் கொரோனாத் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் மாகாண சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்க மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு விசேட சிகிச்சை வழங்க என இரண்டு விசேட சிகிச்சை விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.புதிதாகத் தயார்ப்படுத்தப்பட்டுள்ள விடுதிகளை யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *