யாழ். மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார் மணிவண்ணன் – வெளியானது முடிவு

யாழ். மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார் மணிவண்ணன் – வெளியானது முடிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று புதன்கிழமை காலை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும் களமிறங்கியிருந்தார்.

இந்நிலையில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும், இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் கிடைத்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *