ரயில் சேவையில் புதிய பெட்டிகள் இணைப்பு

ரயில் சேவையில் புதிய பெட்டிகள் இணைப்பு

யாழ் – கொழும்புக்கான ஸ்ரீதேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 பெட்டிகள் M11 locomotive இன்ஜினுடன் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுகின்றன.இவை Air brake system கொண்ட ரயில் பெட்டிகளாகும். இதில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 2 ஆம் 3 ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

நேற்று மதியம் 03.55இற்கு புறப்பட்ட இந்த ரயில் காங்கேசன்துறைக்கு இரவு 22.29 இற்கு வந்து, இன்று காலை அதே ரயில் காங்கேசன்துறையில் இருந்து 03.30 இற்கு புறப்பட்டு, யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 04.00 மணிக்கு வந்து கோட்டைக்கு புறப்பட்டது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *