வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட விமானப் படை வீரர் கைக்குண்டுடன் கைது

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட விமானப் படை வீரர் கைக்குண்டுடன் கைது

அம்பலாங்கொட உஸ்முதுலாவ கிராமிய வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட 44 வயதான விமானப்படை வீரர் ஒருவர் கிரனைட் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வங்கி முகாமையாளரை அச்சுறுத்திய பின் 136,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேக நபர் வங்கியைக் கொள்ளையிட முகத்தை மூடிய தலைக்கவசம் மற்றும் ஜக்கெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் இச்சந்தேக நபர் திருகோணமலையிலுள்ள விமானப் படை முகாமைச் சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *