வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது -கரு ஜயசூரிய

வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது -கரு ஜயசூரிய

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்ட உருவாக்கம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுகள் போன்றவற்றைத் தடைசெய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் ஏற்றவகையில் வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது. மக்கள் கருத்துச்சுதந்திரத்திற்குப் பெரிதும் மதிப்பளிக்கிறார்கள்.

எனவே அதனைக் குறைப்பதற்கான அல்லது மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் போது, அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

ஏனென்றால், மிகவும் நெருக்குதலான சட்டங்கள் அவற்றை உருவாக்கிய அரசாங்கங்களுக்கு எதிராகவே திரும்புவற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *