வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று !

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று !

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்றிரவு வெளியாகின.

அதில் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *