வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண் வெட்டியால் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொது சுகாதார அதிகாரி, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் முகக்கவம் அணியாமல் இருந்த போது முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியமைக்காக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது. சுகாதார சேவையில் பணியாற்றும் அதிகாரிகளை துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடு மையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந் நிலையில் கைதான சந்தேக நபர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் படவுள்ளார். அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை களை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *