விபத்துக்குள்ளான விமானத்தை செலுத்திய விமானியும் உயிரிழப்பு !

விபத்துக்குள்ளான விமானத்தை செலுத்திய விமானியும் உயிரிழப்பு !

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் PT6 வகை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

மேலும் குறித்த விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை சீனக்குடாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புறப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான PT-6 விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த விமானம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *