விஷமத்தனமாக பிரசாரம் செய்யாதீர்! விக்னேஸ்வரன்

விஷமத்தனமாக பிரசாரம் செய்யாதீர்! விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வீ.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள் தான் இருக்கின்றன.

ஒன்று – இதுவரை ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானங்களினால் எங்களுக்குப் பெரிய நன்மையாக ஏதும் வந்து விடவில்லை. அதனால் இனிமேல் இதையே முன்கொண்டு நடத்துவதில் அர்த்தமில்லை. ஆகையினால் இதிலும் காட்டமான, தீவிரமான நடவடிக்கை அவசியம். அதற்கு உதாரணமாக – முன்மாதிரியாக – சிரியாவிலும், மியன்மாரிலும் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறைகளைக் காட்டி, ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டுக்கு நாங்கள் போக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது – இந்த விவகாரம் ஒரு சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே மனித உரிமைகள் சபையில் ஒரு புதுத் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும். இது இரண்டும் தான் அதில் உண்டு.

அதில் காலநீடிப்பு என்றோ, கால அவகாசம் என்றோ, அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றுவது என்றோ எதுவுமேயில்லை.

ஆனால், இவர்கள் இருவரும் நான் அப்படி ஒரு பிரேரணை வரைவைத் தான் முன்வைக்கின்றேன் என்று வேண்டுமென்றே விமத்தனமான, பொய்யான பிரசாரம் ஒன்றை முன்வைக்கின்றனர். அதுதவறு என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *