வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு விடுக்கப்பட்ட புதிய அறிவித்தல்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு விடுக்கப்பட்ட புதிய அறிவித்தல்

இலங்கையால் பயணத்தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்கள், நாடு திரும்பிய முதலாவது நாளில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லாதவர் என உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் ஏழு நாட்களின் பின்னர் கொரோனா பரிசோதனை செய்ய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அவ்வாறு நாட்டுக்கு வரும், இரண்டு முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள், ஏழாம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாட்டின் சுற்றுலாத்துறையை முன்னேற்றும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *