வெள்ளத்துடன் போராடும் டிக்கோயா மக்கள்.

வெள்ளத்துடன் போராடும் டிக்கோயா மக்கள்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் குறித்த தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளநீரானது குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.எனினும் சில மணிநேரத்தின் பின்னர் நீர் வடிந்து பின்னர் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதியும் நீரில் மூழ்கியுள்ளது.இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயத்தை நேற்று இரவு மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *