22 கொரோனாத் தொற்று நோயாளிகள் உயிரிழப்பு!

22 கொரோனாத் தொற்று நோயாளிகள் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்யை தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நாட்டில் அதிகபடியான ஒற்றை நாள் உயிரிழப்புகள் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.அதன்படி கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764 இல் இருந்து 786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று மொத்தமாக 1,896 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 123,234 ஆக காணப்படுகிறது.கொரோனா தொற்றிலிருந்து 103,098 பூரண குணமடைந்துள்ளதுடன், தற்சமயம் வைத்தியசாலைகளில் 19,350 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *